பிரெஞ்சு ஓபன்: போபண்ணா ஜோடி தோல்வி


பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி இத்தாலியின் சிமோன் பொலேலி, ஆண்ட்ரியா வசோரி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகன் போபண்ணா ஜோடி 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

x