சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள குவைத் தினார் பறிமுதல்


சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள குவைத் தினார் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று மதியம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது வந்த கங்கா ஆஷார்(36) என்ற பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 8,500 குவைத்தினார் கரன்சிநோட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x