தமிழகத்தில் முதல்முறையாக கூகுளின் பிக்சல் தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலினுடன் கூகுள் அதிகாரிகள் விரைவில் சந்திப்பு


சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஃபாக்ஸ்கானுடன் இணைந்து கூகுள் பிக்சல் மொபைல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்காக, கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதை லட்சிய இலக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.

அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபுநாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி அவற்றின் மூலம் ரூ.9.61 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

இவற்றின் பலனாக 30 லட்சம்இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமெரிக்கா சென்றார். அங்கு உலகப் புகழ் பெற்ற கூகுள்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனஅதிகாரிகளுடன் சென்று தமிழகத்தில் தொழில் தொடங்குவது குறித்துபேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, கூகுள் நிறுவன அதிகாரிதமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் மொபைல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளனர்.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர்.

இதன்மூலம் சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும்தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில்உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

x