அதிமுக தொண்டர்கள் ஒன்றாக வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்


சென்னை: ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் ஒன்றாக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒற்றைக் குச்சியை ஒடிப்பதுசுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம்சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளைநமதே என்னும் எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக்கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட வேறுபாடுகளை மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப்போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் ஆயத்தமாவோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x