மினி டெம்போ இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: மேட்டூர் அருகே இருவர் உயிரிழப்பு


மேட்டூர்: மேட்டூர் அருகே நங்கவள்ளியில் சரக்கு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேட்டூர் அருகே நங்கவள்ளி அடுத்த வனவாசி பகுதியை சேர்ந்த சாமிநாதன் (22), இவரது நண்பர் சேலம் தொளசம்பட்டியை சேர்ந்த கலையரசன் (19). இருவரும் மேட்டூரில் உள்ள உறவினர்களை பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் இன்று மதியம் நங்கவள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இரு சக்கர வாகனத்தை கலையரசன் ஓட்டி வந்துள்ளார். நங்கவள்ளியை அடுத்த பாசக்குட்டை பகுதியில், வந்த கொண்டிருந்த போது இரு சக்கர வாகனமும் எதிரே வந்த மினி டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சாமிநாதன், கலையரசன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

விபத்த குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, விபத்து குறித்து நங்கவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x