சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் பெண்ணின் நகையை திருடிய 2 பேர் கைது


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம்தங்க நகை, ஆபரணங்கள் அடங்கிய பையை திருடிய இருவரைரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கத் தைச் சேர்ந்தவர் தனலட்சுமி(37). இவர் கடந்த 18-ம் தேதிஉறவினர் ஒருவரை பார்ப்பதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வந்தார். அங்குகாத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தார்.

தங்க நகை,ஆபரணங்கள் அடங்கிய பையை தனது அருகில் கீழே வைத்திருந்தார். அவருக்கு பின்னால், இருவர்அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் உறவினரைப் பார்க்க எழுந்தபோது, பக்கத்தில் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது.

அங்கு பல இடங்களில் தேடினார். இருப்பினும், அவரது பை கிடைக்கவில்லை. அதில் ஒரு பவுன் தங்க நகை, 4 கிராம் கம்மல், 2 ஜோடி கொலுசு வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு: இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் தனலட்சுமி புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார், குற்றவாளிகளை தேடுதல் வேட்டையில் இறங்கினர். முதலில், ரயில் நிலையத்தில் சிசிடிவிகேமராவில் பதிவான காட்சிகளைவைத்து ஆய்வு செய்தனர். இதில், தனலட்சுமி பையை இருவர் எடுத்துச்செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திவந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் மூர்மார்க்கெட் வளாகத்தில் நிற்பதாக தகவல் கிடைத்தது.இதன்பேரில்,ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பழைய குற்றவாளிகள்: விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த பீர்முகம்மது (47), பெருங்களத்தூரை சேர்ந்தரவி(63) என்பதும், தனலட்சுமி பையை திருடியதும், இவர்கள் பழைய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் இருந்து தங்க நகை, ஆபரணங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x