காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் உக்கிரமான போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது மேற்கொண்டு வரும் தீவிரமான தாக்குதலால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் நடத்தப்பட்ட சிலநாட்கள் போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், உலக நாடுகள் போரை நிறுத்தக் கோரியும் கேட்காமல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது. ஐநா சபை பலமுறை கண்டனம் தெரிவித்தும் போரை நிறுத்த முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலை எச்சரித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினை முழுமையாக ஒழிக்கும் வரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் அறிவித்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலை எச்சரித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினை முழுமையாக ஒழிக்கும் வரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் அறிவித்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு?! எதிர்த்து கோஷமிட்ட ரசிகர்கள்!
விஜயகாந்துக்கு செய்வினை வெச்சுட்டாங்க... பீதியைக் கிளப்பிய கங்கை அமரன்!
நன்றி மறந்த வடிவேலு... வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
அதிர்ச்சி... தேசிய விளையாட்டுப் போட்டியில் 25 வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர்!