பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை... விளாடிமிர் புதின் சொன்ன மகிழ்ச்சி தகவல்!


புதின் - மோடி

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய நாட்டுக்கு வருமாறு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா சென்றுள்ள மத்திய அமைச்சர் விளாடிமிர் புதினிடம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் துணை பிரதமர், தொழிற்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து சர்வதேச அரசியல், வர்த்தகம் குறித்த கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து நேற்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தை பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்து தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்டேன். அமைச்சர்கள் மந்துரோவ் மற்றும் லாவ்ரோவ் ஆகியோருடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள் அதிபர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளின் மேலும் முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதலைப் அவர் பாராட்டினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியும். உக்ரைன் நிலைமை உள்ளிட்ட சிக்கலான செயல்முறைகள் குறித்த அவரது அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் சூழல் குறித்து அவருக்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைத்திருக்கிறேன். அமைதியான வழிகளில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர் பாடுபடுவதை நான் அறிவேன் என்றும் விளாடிமிர் புதின் கூறியதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x