உயிருக்கு அச்சுறுத்தல்! நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை நீதிபதி


அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய நிபந்தனைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரசு தரப்பில் அழுத்தங்கள் வந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன். இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் மூலமாக நீதித்துறை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்" என்று கூறினார்.

x