புரட்டியெடுத்த கனமழையால் உடைந்த அணை... 2 லட்சம் பேர் வெளியேற்றம்; ரஷ்யாவில் அதிர்ச்சி!


மீட்புப் பணி

கனமழை காரணமாக ரஷ்யாவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அதையடுத்து அங்கிருந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி

ரஷியாவின் கஜகஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது ஒரேன்பர்க் மாகாணம். இங்கு கடந்த சிலநாட்களாக தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள உரல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள ஒர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒர்ஸ்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆற்றோர குடியிருப்புகளில் தங்கியிருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊருக்குள் புகுந்த வெள்ளம்

இந்த நிலையில் தொடர் கனமழை, வெள்ளத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உரல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. அணை பகுதியை சுற்றிலும் வெள்ளத்தில் சிக்கிய 2 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை அரசு சார்பில் தொடர்ந்து செய்து வருவதாகவும், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x