மேலும் ஐந்து நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி... மத்திய அரசு தாராளம்!


அரிசி

கொமோரோஸ், மடகாஸ்கர் உள்ளிட்ட மேலும் 5 நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விலையை பாதுகாக்கவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வது ஜூலை 20ம் தேதி தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் சில நாடுகளின் கோரிக்கையை ஏற்று நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீஷெல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மட்டும் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் தற்போது மேலும் ஐந்து நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் கொமோரோஸ், மடகாஸ்கர், ஈக்குவடோரியல் கினியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது.

கொமோரோஸ் நாட்டுக்கு 20,000 மெட்ரிக் டன், மடகாஸ்கருக்கு 50,000 மெட்ரிக் டன், ஈக்குவடோரியல் கினியாவிற்கு 10,000 மெட்ரிக் டன், எகிப்து நாட்டிற்கு 60,000 மெட்ரிக் டன் மற்றும் கென்யாவிற்கு 1,00,000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.

x