மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளத்தில் இஸ்ரேலில் கட்டுமான பணிக்கு 10 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தற்போது தொடங்கி உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து காஸா மீது இஸ்ரேல் திருப்பி தாக்குதல் நடத்தியது. போர் தொடங்கி விட்டதாக கூறிய இஸ்ரேல், காஸா நகர் மீது வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதுவரை காஸாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதனால், இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனத்தின் தொழிலாளர்கள் வெளியேறி உள்ளனர். அதன் காரணமாக அங்கு கட்டுமானப் பணிகள் முடங்கி உள்ளன. இத்தகைய சூழலில்தான் இஸ்ரேலில் கட்டுமானப்பணிக்கு இந்தியாவில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரேல் சென்று பணியாற்றலாம்.
கட்டுமானப் பணிக்கான கொத்தனார், தச்சுத் தொழிலாளி, டைல்ஸ் ஓட்டுபவர், கம்பி கட்டுபவர் உள்ளிட்டவர்கள் அதிகமாக இஸ்ரேலுக்கு தேவைப்படுகிறது. முதற் கட்டமாக 10,000 பேரை தேர்வு செய்து இஸ்ரேல் அழைத்துச்செல்லும் வகையில் 15 பேர் கொண்ட இஸ்ரேல் குழு இந்தியா வந்துள்ளது.
இவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் இஸ்ரேலுக்கு அழைத்து செல்ல உள்ளனர்.
இதற்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பு முகாம் என்பது ஹரியாணாவில் தொடங்கி உள்ளது. இன்று தொடங்கிய இந்த ஆட்சேர்ப்பு முகாம் வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.37 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி மருத்துவக் காப்பீடு, உணவு, தங்குமிடம், மாதம் ரூ.16,515 போனஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.
இந்த குழு அடுத்ததாக உத்தரப் பிரதேசத்தில் ஆட்சேர்ப்பை நடத்த உள்ளது. அங்கு ஜனவரி 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வெளிநாட்டு வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன் அடையலாம்.
இதையும் வாசிக்கலாமே...
புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள்!
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டர் பக்கம் முடக்கம்!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
கலித்தொகையில் இருக்கிறது ஜல்லிக்கட்டு... அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!