எலான் மஸ்க், பில்கேட்ஸ் கொல்லப்படுவார்கள்... அல்-கொய்தா பகிரங்க மிரட்டல்!


அல்-கொய்தா அமைப்பினர்

அமெரிக்க வர்த்தக அதிபர்களான எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் சத்யா நாதெல்லா ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று அல் -கொய்தா பயங்கரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

எலான் மஸ்க்

காஸா பகுதியில் 20,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான போருக்கு ஆதரவளிப்பதன் காரணமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்களது இலக்கில் இருப்பதாக OSINT) குழுவின் ஊடகப் பிரிவு வீடியோ வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், யூதர்களை ஆதரிப்பதன் காரணமாக எலான் மஸ்க், பில்கேட்ஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கே ஆகியோர் பயங்கரவாதிகளின் இலக்கில் உள்ளனர் என்றும், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் அவர்களின் செல்வாக்கு காரணமாகவும் பயங்கரவாதிகளின் இலக்கில் அவர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ்

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மருடன் இணைந்து அல்- கொய்தா அனுதாபிகளை குறிவைத்தது தொடர்பாக பில்கேட்ஸின் பேச்சும் அதில் இடம் பெற்றுள்ளது.

அல்- கொய்தாவின் ஊடகப் பிரிவான அல் மலாஹெம் மீடியா சார்பில், ``பாலஸ்தீன அரசை மீட்டெடுப்பதற்காக” வீடியோவாக இது வெளியிடப்பட்டுள்ளது. "அமெரிக்க போர் இயந்திரம்” இஸ்லாமிய உலகில் பேரழிவை கட்டவிழ்த்துவிட்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட உலகத் தலைவர்களை சந்தித்தது மற்றும் இஸ்லாமுக்கு எதிரான போரில் மேற்கு நாடுகள் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் அல்கொய்தா குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x