சென்னை: காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் மே 24ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 3,935 இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 12.07.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இன்று முதல் வரும் மே 24ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், வெறும் 3,935 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர்.