மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,872 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,369 கன அடியாக அதிகரித்தது. அணை யிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.73 அடியாகவும், நீர் இருப்பு 75.22 டிஎம்சியாகவும் இருந்தது.
இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 21-ம் தேதி காலை விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 22-ம் தேதி 3,000 கனஅடியாகக் குறைந்தது. அன்று முதல் தொடர்ந்து 3 நாட்களாக நீர்வரத்து மாற்றமின்றி விநாடிக்கு 3,000 கனஅடியாகவே தொடர்கிறது.