பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி


பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் ராமேசுவரம் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராமேசுவரம்: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பாஜக சார்பில் மலர் தூவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்கு செவ்வாய்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழழந்தவர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

x