சிவகங்கை ஆயுதப்படையில் 30 வயதுள்ள பெண் காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் நேற்று பெண் காவலர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.