ராஜபாளையம்: எஸ்.ராமலிங்காபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 6 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.ராமலிங்காபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 400 பயனாளிகள் உள்ளனர். இத்திட்டத்தில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப் படாததை கண்டித்து, எஸ்.ராமலிங்காபுரம் பேருந்து நிறுத்தத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.