பொது மேடைகளில் அரசி​யல் கட்​சி​யினர் பேசுவதற்​கான வழி​காட்​டு​தல்​ உரு​வாக்க வேண்டும்


மதுரை: அரசியல் கட்சியினர் பொது மேடைகளில் பேச வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த அமிர்த பாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அரசியல் கட்சித் தலைவர்கள் பொது இடங்களில் பேசும்போது சாதி, மத, வெறுப்பைத் தூண்டும் வகையிலும், பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசுவது அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதுடன், சட்டம்- ஒழுங்கும் கெடும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, அரசியல் கட்சித் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது நாகரிகமாகப் பேசுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்கவும், இதுவரை சாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை ஆபாசமாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், சாதி, மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், பெண்களை ஆபாசமாகவும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x