ஜாமீனா, அமைச்சர் பதவி வேண்டுமா? - செந்தில் பாலாஜி முடிவு எடுக்க ஏப்.28 வரை உச்ச நீதிமன்றம் கெடு


புதுடெல்லி: அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு வழங்​கப்​பட்ட ஜாமீனை ரத்து செய்​யக் கோரிய வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், அவருக்கு ஜாமீன் வேண்​டு​மா, அமைச்​சர் பதவி வேண்​டு​மா என்​பது குறித்து ஏப்​.28-ம் தேதிக்​குள் முடிவுசெய்து பதில் அளிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

அரசு போக்​கு​வரத்து கழகத்​தில் வேலை வாங்கி தரு​வ​தாக கூறி பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் செந்​தில் பாலாஜியை சட்ட விரோத பணப்பரி​மாற்ற தடை சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை கடந்த 2023 ஜூனில் கைது செய்​தது. இந்நிலையில் கடந்த 2024 செப்.​ 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியதால் அவர் மீண்​டும் அமைச்​ச​ரானார்.

இந்தநிலை​யில், அவருக்கு வழங்​கிய ஜாமீனை ரத்து செய்​யக் கோரி வித்​யாகு​மார் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். நீதிப​தி​கள் அபய் எஸ்​.ஓஹா, அகஸ்​டின் ஜார்ஜ் மாசி அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, செந்​தில் பாலாஜி தரப்​பில், சாட்​சிகளை கலைக்கப்படும் என்ற அச்​சம் இருந்​தால், விசா​ரணையை வேறு மாநிலத்​துக்கு மாற்​றக் கோரப்பட்டது.

இதையடுத்​து, வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், செந்​தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்​படை​யில் நாங்​கள் ஜாமீன் வழங்​க​வில்​லை. அவருக்கு ஜாமீன் வேண்​டுமா அல்​லது அமைச்​சர் பதவி வேண்​டுமா என்​பதை அவரே முடிவுசெய்​து​கொள்​ளட்​டும். இதுதொடர்​பாக ஏப்​ரல் 28-ம் தேதிக்​குள் முடிவுசெய்து பதில் அளிக்க வேண்​டும் என உதரவிட்டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தனர்​.

x