முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு: ராமநாதபுரத்தில் சோகம்


ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருது என்பவர் மனைவி சண்முகவள்ளி (39). ஆடுகளை வளர்த்து வரும் இவர், ஞாயிற்றுகிழமை மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு பின்புறம் பட்டியில் ஆடுகளை அடைய போட்டுள்ளார். அப்போது மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீஸார் மின்னல் தாக்கி சண்முகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கீழத்தூவல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x