மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 4,000 கனஅடியாக நீர்வரத்து தொடர்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,385 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,832 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 107.55 அடியாகவும், நீர் இருப்பு 74.97 டிஎம்சியாகவும் இருந்தது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் மாற்றமின்றி 4 ஆயிரம் கனஅடியாகவே நீடித்தது.