கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் இன்று மாலை மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
5 தீயணைப்பு வாகனங்கள், 4-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரங்கள், 4-க்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி வாகனங்கள், 30-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு முழுமையாக கட்டுப்படுத்தினர்.
கோவை மாநகர மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றி செல்வன், துணை ஆணையர்கள் சுல்தானா, குமரேசன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்தில் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.