செல்போன் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயருகிறது: அச்சச்சோ இவ்வளவு அதிகமா? - அதிர்ச்சி தகவல்


சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் கடந்தாண்டு ஜுலை மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டணங்களை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன.

நடப்பாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் செல்போன் நிறுவனங்கள் 10% -20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் புலம்பும் நிலையில், மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு அவர்களுக்கு பேரிடியாகியுள்ளது.

x