கோவை: ஒரு வார ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வீடு திரும்பினார். கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்.
இந்த மையத்தில் நீராவி குளியல், யோகா, நேச்சுரோபதி, அக்குபஞ்சர், பிசியோதெரபி, சிறப்பு தெரபி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இரவு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் தேனி புறப்பட்டுச் சென்றார்.