ராணிப்பேட்டை: சோளிங்கரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மலை மீது உள்ள இக்கோயிலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்துச் செல்ல வேண்டியிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கம்பி வட ஊர்தி (ரோப் கார் சேவை ) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கோயிலுக்கு செல்ல அனைத்து வகையான மக்களுக்கும் பயனுள்ளதாக இந்த சேவை அமைந்துள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கம்பிவட ஊர்தி சேவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஏப்.21 -ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏப்.25ம் தேதி கம்பிவட ஊர்தி வழக்கம் போல் செயல்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.