சென்னை: வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத் தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரித்ததற்கும், வக்பு சொத்துகளை பாதுகாப்பதற்கும், வக்பு வாரியங்கள் அல்லது கவுன்சில்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை நியமிப்பதை தடுப்பதற்குமான இடைக்கால உத்தரவை பிறப்பித்ததற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.
சிறுபான்மையினர்களுக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உரிமைகளை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.