ஈரோடு: தமிழகத்தில் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடி பேச்சைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், ‘தமிழகத்தில் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வழியில் எதிர்கட்சி தலைவர் சிறப்பான ஆட்சியை நடத்தினார். அந்த நல்லாட்சி மீண்டும் வர வேண்டும். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் கற்றுக்கொண்டு உள்ள பாடத்தை பின்பற்றி வருகிறார்கள்
இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்ற அமைச்சர் ஆபாசமாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது, அவர்களை போன்று கீழ்தரமாக நாம் விமர்சனம் செய்யக்கூடாது.
அமைச்சர் மக்களை பற்றி கவலை படாமல் பேசி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. இப்படி மோசமாக செயல்படுபவர்களை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் போது டெபாசிட் இழக்க செய்து மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி பேச்சால் திமுக அரசு தத்தளித்துக் கொண்டு தடுமாறி கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக தான் அதிமுக 2026ம் ஆண்டு புரட்சி தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமையும்” என தெரிவித்தார்.