தொடங்கியது கோடை விடுமுறை... மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன டிப்ஸ்!


சென்னை: கோடை விடுமுறையை மாணவர்கள் எப்படி கழிக்க வேண்டும். எப்படி உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்றுடன் நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது.

கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீர் அதிகம் பருகுங்கள்.

சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள்.

பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்.

அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள்.

திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள்.

பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.

மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்

x