விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு


சென்னை: ​விசைத்​தறி உரிமை​யாளர்​கள் பிரச்​சினையை தீர்க்க தமிழக அரசு துரித நடவடிக்​கைகளை​ மேற்​கொண்டு வரு​வ​தாக அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பூஜ்ஜிய நேரத்​தில், கோவை, திருப்​பூரில் நடை​பெறும் விசைத்​தறி உரிமை​யாளர்​கள் போராட்​டம் தொடர்​பாக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கவனஈர்ப்பு தீர்​மானம் கொண்​டு​வந்து பேசும்​போது, “கோவை, திருப்​பூர் மாவட்​டங்​களில் இயங்கி வரும் 1.5 லட்​சம் விசைத்​தறிகளில் கூலிக்கு நெசவு செய்​வோர் கூலி உயர்வு கேட்டு போராடி வரு​கின்​றனர். மேலும், 2022 முதல் கூலி குறைத்து வழங்​கப்​படு​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர்.

நியாய​மான நெசவுக் கூலி உயர்வு வழங்​கக் கோரி மார்ச் 19-ம் தேதி முதல் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும், சோமனூரில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. எனவே, விசைத்​தறி உரிமை​யாளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​புடன் அரசு பேச்சு வார்த்தை நடத்​தி, உரிய தீர்​வு​காண வேண்​டும்” என்​றார். இதற்கு அமைச்​சர்​கள் அளித்த பதில் விவரம்:

அமைச்​சர் தங்​கம் தென்​னரசு: அமைச்​சர்​களும், மாவட்ட ஆட்​சி​யர்​களும் தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இப்​பிரச்​சினையை தீர்க்க வேண்​டும் என்​ப​தில் முதல்​வர் உறு​தி​யாக உள்​ளார். பிரச்​சினையை உடனடி​யாக தீர்ப்​ப​தற்​கான அனைத்து நடவடிக்​கைகளை​யும் அரசு எடுத்து வரு​கிறது.

அமைச்​சர் செந்​தில் பாலாஜி: விசைத்​தறி உரிமை​யாளர்​களுக்கு வழக்​கப்​பட்டு வரும் இலவச மின்​சா​ரம் 750 யூனிட்​டிலிருந்து 1,000-ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதனால் 1.67 லட்​சம் விசைத்​தறி உரிமை​யாளர்​களில் 1.27 லட்​சம் பேர் 1,000 யூனிட்​டுக்​குள்​தான் மின்​சா​ரம் பயன்​படுத்​துகின்​றனர். சுமார் 30 ஆயிரம் பேர் மட்​டுமே மின் கட்​ட​ணம் செலுத்​துகின்​றனர். இத்​திட்​டத்​துக்​காக அரசு மானி​யம் ரூ.571 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அமைச்​சர் ஆர்​.​காந்​தி: விசைத்​தறி உரிமை​யாளர்​கள் மார்ச் 19-ம் தேதி​தான் போராட்​டத்தை தொடங்​கினர். ஆனால், முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​வின் பேரில் பிப்​.27-ம் தேதியே விசைத்​தறி உரிமை​யாளர்​களை அழைத்து, திருப்​பூர் மாவட்ட வருவாய் அலு​வலர், தொழிலாளர் நலத்​துறை அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி​உள்​ளனர். ஏப். 11-ம் தேதி ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், கயல்​விழி செல்​வ​ராஜ் ஆகியோர் தலை​மை​யில் சமரசக் கூட்​ட​மும் நடை​பெற்​றது.

ஏப்​.15-ல் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் விசைத்​தறி உரிமை​யாளர்​கள் 28 சதவீதம் ஊதிய உயர்வு கோரினர். பணி வழங்​கு​வோர் 5 சதவீதம் தர சம்​ம​தித்​தனர். பின்​னர் விசைத்​தறி உரிமை​யாளர்​கள் கூடி பேசி முடிவு செய்​து​விட்டு வரு​வ​தாகச் சென்​றனர். இந்த பிரச்​சினையை முடிவுக்கு கொண்​டுவர அரசு நடவடிக்​கை எடுத்​து வரு​கிறது. இவ்​வாறு அவர்​கள்​ பதில்​ அளித்​தனர்.

x