இந்து-முஸ்லிம்களிடையே கலவரத்தை தூண்டி தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு


மதுரை: வக்பு சட்ட திருத்​தத்தை முன்னிறுத்தி இந்​துக்​கள்​-​முஸ்​லிம்​களி டையே கலவரத்​தைத் தூண்டி 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் சதி செய்​வ​தாக பாஜக சிறு​பான்​மைப் பிரிவு தேசி​யத் தலை​வர் வேலூர் இப்​ராஹிம் கூறினார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தத்​தில் பாஜக சார்​பில் வக்பு சட்​டத் திருத்த ஆதரவு பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. இதில் பங்​கேற்​ப​தற்​காக மதுரை வந்த வேலூர் இப்​ராஹிம், அங்​கிருந்து நத்​தம் புறப்​பட்​ட​போது போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர்.

தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் வேலூர் இப்​ராஹிம் கூறிய​தாவது: மத்​திய அரசின் வக்பு சட்​டத் திருத்​தத்​தால் வக்பு வாரிய சொத்​துகள் பாது​காக்​கப்​படும். முஸ்​லிம்​களுக்​கும் பலன் கிடைக்​கும். ஆனால், வக்பு சட்​டத் திருத்​தம் முஸ்​லிம்​களுக்கு எதி​ரானது என திமுக​வும், அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் பிரச்​சா​ரம் செய்து வரு​கின்​றன. இந்த சட்​டத்​துக்கு எதி​ராகப் போராடு​மாறு முஸ்​லிம்​களை முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக கூட்​ட​ணிக் கட்​சி​யினர் தூண்டி வரு​கின்​றனர்.

வாக்கு வங்கி அரசியல்... எனவே, பாஜக சார்​பில் வக்பு சட்​டத் திருத்​தத்​துக்கு ஆதர​வாக கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டு, முஸ்​லிம்​களிடம் சட்​டம் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​தக் கூட்​டங்​களில் பேசுவதற்​காகச் செல்​லும் என்னை போலீ​ஸார் தொடர்ந்து கைது செய்து வரு​கின்​றனர். பாஜக​வினர் முறை​யாக அனு​மதி பெற்று கூட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர். இதில் என்னை பங்​கேற்க விடா​மல் தடுத்​து, அற்​ப​மான வாக்கு வங்கி அரசி​யலை தமிழக முதல்​வர் மேற்​கொண்டு வரு​கிறார்.

பாஜக வேடிக்​கை பார்க்​காது: தமிழகம் முழுக்க இந்​துக்​கள், முஸ்​லிம்​கள் மத்​தி​யில் கலவரத்தை ஏற்​படுத்தி 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற திமுக​வும், அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் திட்​ட​மிட்​டுள்​ளன. இதை பாஜக வேடிக்​கைப் பார்க்​காது. தமிழகம் முழுக்க வக்பு சொத்​துகள் ஆளும் கட்​சி​யினரிடம் உள்​ளன.

மேற்கு வங்​கம், மத்​திய பிரதேசம், அசாம் மாநிலங்​களில் வக்பு சட்​டத் திருத்​தத்​துக்கு எதி​ராக முஸ்​லிம்​களை போராடத் தூண்டி வரு​கின்​றனர். இதனால் அங்கு வன்​முறை நிகழ்ந்​துள்​ளது. அதே​போல, அமை​திப் பூங்​கா​வான தமிழகத்​தி​லும் கலவரத்தை தூண்ட சதி செய்து வரு​கின்​றனர். தி​முக ஆட்​சியை முடிவுக்கு கொண்டு வரு​வது​தான்​ பாஜக​வின்​ வேலை. இவ்​வாறு வேலூர் இப்ராஹிம் கூறி​னார்​.

x