சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்படள்ளன. இதற்கு www.mrb.In.gov.in இணைய தளத்தில் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்). 2 மணி நேரம் கணினி வழியில் மருந்தியல் தேர்வும் நடைபெறும் . தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்சி -ஏ எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500. மற்றவர்களுக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.