சிறந்த பணிக்கென மதுரை ரயில்வே கோட்டத்துக்கு 6 விருதுகள்!


மதுரை: சிறந்த பணிக்கென மதுரை ரயில்வே கோட்டத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் தெற்கு ரயில்வே சார்பில், 69வது ரயில்வே வார விழா நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்ட மதுரை கோட்ட பொறியியல் பிரிவு, போக்குவரத்து பிரிவு, சைகை மற்றும் தொலைத் தொடர்பு பிரிவு, ஊழியர் நலப்பிரிவு, மருத்துவ பிரிவு, பண்டக சாலை பிரிவு ஆகியவற்றிற்கு சுழற் கேடயங்கள் வழங்கப்பட்டன.

முறையே முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் எம். கார்த்திக், முதுநிலை கோட்ட போக்குவரத்து மேலாளர் பிரசன்னா, முதுநிலை தொலைத்தொடர்பு பொறியாளர் ஆர். ராம்பிரசாத், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் எம். பாஸ்கரன், முதுநிலை கோட்ட பண்டக பிரிவு மேலாளர் சைலேஷ் குமார் மௌர்யா ஆகியோர் கேடயங்களை பெற்றனர். கேடயங்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் வழங்கி பாராட்டினார்.

மேலும், இக்கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முதுநிலை கோட்ட தொலைத்தொடர்பு மேலாளர் ஆர். ராம் பிரசாத், வர்த்தக பிரிவு உணவு ஆய்வாளர் ஓ. சதீஷ், ரயில் இன்ஜின் லோகோ பைலட் எஸ்.ஆர். சாஜு, உதவி லோக்கல் பைலட் ஏ.அய்யாசாமி, ரயில் பாதை பராமரிப்புப் பணியாளர் கிரிராஜ் மீனா, நெல்லை ரயில் பெட்டி பராமரிப்புப் பொறியாளர் எம். மந்திரமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் ஆர். முருகேசன், அலுவலக கண்காணிப்பாளர் ஆர். சுதா ஆகியோருக்கு விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் (சிறப்பு ரயில் சேவை விருது) விருதுகள் வழங்கப்பட்டன.

x