மாணவி வன்கொடுமை விவகாரம்...  ஐகோர்ட்டில் இன்று விசாரணை!


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகின்றது.

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் அளித்த கடிதத்தை ஏற்று சூமோட்டோ வழக்காக விசாரிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

மாணவி வன்கொடுமை தொடர்பான சூமோட்டோ வழக்கை இன்றே விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தரப்பில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

x