கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு 60 சதவீதம் அதிகரிப்பு... கடும் பீதியில் பெங்களூரு மக்கள்!


டெங்கு காய்ச்சல்

பெங்களூருவின் பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60 சதவீதம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் 2023-ம் ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் பாதியில் டெங்கு பாதிப்பு 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 2023-ல் டெங்குவால் மொத்தம் 2,003 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் ஜூன் மாதத்தில் 4,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். பிபிஎம்பியின் கீழ் 1,230 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு

பெங்களூருவின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறி வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. இது தவிர, மற்ற காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன. கர்நாடகா மாநிலத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் பெங்களூருவில் கடந்த மே மாதத்தில் 727 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது.

டெங்கு கொசு.

இந்த நிலையில், கடந்த 20 நாட்களில் 1,230 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் ஜனவரி முதல் திங்கள் (ஜூன் 24) வரை 2457 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஜூன் 20 வரை மாநிலத்தில் மொத்தம் 7,343 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 60 சதவீதம் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூரு மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதன் காரணமாக ஏடிஸ் கொசு உற்பத்தியை அழிக்க வேண்டும், ஆஷா பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று தூய்மையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலைக் கண்காணிக்க வார்டுகள் அல்லது கிராமங்களுக்குச் சென்று சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்காணிக்க வேண்டும்.

மேலும் என்எஸ்ஐ ஆன்டிஜென் மற்றும் ஐஜிஎம் டெஸ்டிங் கிட் சந்தேகத்திற்கிடமான டெங்கு பாதிப்புகளுக்கு சோதிக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு பணி

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்," பெங்களூரு உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. எனவே, மக்கள் வீட்டைச் சுற்றிலும் தூய்மையைப் பேணவும், உறங்கும் போது கொசுவலையைக் கட்டிக் கொள்ளவும், வெந்நீர் அருந்தவும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மூன்றாவது நாளாக காய்ச்சல் விட்டுவிட்டு மீண்டும் காய்ச்சல் வந்தால், வாந்தியும் சேர்ந்து இருந்தால் டெங்கு பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர்.

x