இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியைத் தூவி சித்ரவதை... பதற வைக்கும் சம்பவம்!


பண்ணையில் வேலை செய்த மறுத்த இளம்பெண்ணை அடித்து உதைத்து அவரின் அந்தரங்க உறுப்பினர் மிளகாய் பொடியை தூவி ஒரு கும்பல் 11 நாட்களாக சித்ரவதை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள நாகர்குர்னூலில் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது.27 வயது இளம்பெண்ணுக்கும், அவரது சகோதரி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதனிடையே இளம்பெண், அந்த இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசனிடம் கடன் வாங்கியுள்ளார்.

ஹைதராபாத்

அந்தக் கடனை அடைக்க அவரது பண்ணையில் இளம்பெண் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தன் அக்கா மீது உள்ள கோபத்தால் இளம்பெண் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் சகோதரி மற்றும் அவரது கணவர், இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசன் ஆகியோர் அவரைத் தடியால் தாக்கினர்.

அத்துடன் அவரின் கண்கள், முகம், அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி போட்டு சித்ரவதை செய்துள்ளனர். அத்துடன் இளம்பெண் மீது டீசலை ஊற்றி தீவைத்தனர். அந்த இளம்பெண்ணை ஜூன் 8-ம் தேதி முதல் ஜூன் 19-ம் தேதி வரை 11 நாட்களாக சித்வதை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தாமதமாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் அறிந்த இளம்பெண் மீட்கப்பட்டு நிஜாம் மருத்துவமனையில் (நிம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தனர். லிங்கசாமி, லட்சுமி, பாண்டி வெங்கடேஷ், பாண்டி சிவம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணை, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " இளம்பெண்ணின் அனைத்து மருத்துவச் செலவையும் அரசு ஏற்கும் என்றதுடன், இளம்பெண்ணுக்கு சொந்த வீடு இல்லையென்றால் அவருக்கு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் என்றார். மேலும் அவரது குழந்தைகள் அரசு சமூக நலப்பள்ளியில் கல்வி கற்பதோடு விவசாயத்திற்குத் தேவையான நிலமும் வழங்கப்படும்" என்றார்.

x