’எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மகளுக்குத் நேற்று சென்னையில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பது தான் சீரியலில் கதைக்கரு. இதில் நடிக்கும் நடிகைகள் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா ஆகியோரது நடிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இந்நிலையில், இயக்குநர் திருச்செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கு ஹரிக்குமார் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்த வீடியோவை தொகுப்பாளர் அசார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ’திருமண வரவேற்பு! மணமக்களுக்கு வாழ்த்துகள்’ எனக் கூறி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.