வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்கள்: கட்டணமில்லாமல் பெற இன்று சிறப்பு முகாம்!


கனமழையால் வெள்ளம்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த சான்றிதழ்களைக் கட்டணம் இல்லாமல் பெற வசதியாக சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன.

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று சான்றிதழ் நகல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிறப்பு, இறப்பு சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல்களைப் பெற வசதியா இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் வீடுகளுக்குள் புகுந்த பெரு வெள்ளம்

ஏற்கெனவே, கல்விச் சான்றிதழ் நகல்களைக் கட்டணமில்லாமல் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது. தமிழக அரசின் www.mycertificates.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் பதிவு செய்து, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களின் நகலைப் பெற்றுகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருக்கும் சிறப்பு முகாம் மற்றும் சான்றிதழ் நகல் பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு 1077 என்ற எண்ணில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்காணிப்பு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x