மகளுடன் வசிக்க லண்டன் செல்கிறார் முருகன்... ஜெயக்குமார், ராபர்ட் பயாஸுக்கும் பாஸ்போர்ட் வழங்கியது இலங்கை!


முருகன், ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார்

“முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள்” என் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்திரா காந்தி - ராஜிவ் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், விசாவுக்கு ஙிவிண்ணப்பிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேவை என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் முருகன்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, ”முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும். அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இலங்கை

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ”இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில், தனியாக அடையாள அட்டை தேவையில்லை” எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

x