பெண்கள் 70 மணி நேரம் உழைக்கிறார்கள்... அவர்கள் குறித்து யாரும் பேசுவதில்லை; நாராயணமூர்த்திக்கு ராதிகா குப்தா பதிலடி!


ராதிகா குப்தா

இந்தியாவில் உள்ள பெண்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் 70 மணி நேரம் உழைக்கிறார்கள். ஆனால் அதுகுறித்து யாரும் பேசுவதில்லை என எடெல்வீஸ் சிஇஓ ராதிகா குப்தா தெரிவித்துள்ளார்

நாராயண மூர்த்தி

இன்போசிஸ் நாராயண மூர்த்தி - மோகன்தாஸ் பாய் உடனான தி ரெக்கார்ட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு தற்போது சர்வதேச அளவில் கிடைத்துள்ள மரியாதையை பயன்படுத்த அடுத்த 20 அல்லது 50 வருடங்களுக்கு இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் அதாவது வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றி இந்தியாவை உலகின் 2வது அல்லது 3வது சக்திவாய்ந்த நாடாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், எடெல்வீஸ் சிஇஓ ராதிகா குப்தா, ''இந்திய பெண்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கிறார்கள். பல ஆண்டுகளாக புன்னகையுடன் உழைத்து வரும் அவர்கள் இது குறித்து யாரும் எக்ஸ் தளத்தில் விவாதிப்பதில்லை’’ என கூறியுள்ளார்.

x