கொடைக்கானலில் மே 24-ல் மலர் கண்காட்சி: கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு


கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ள பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

திண்டுக்கல்: ​கொடைக்​கானலில் கோடை விழா மற்​றும் மலர்க் கண்​காட்சி வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 9 நாட்​கள் நடை​பெறுகிறது. மலைகளின் இளவரசி​யான கொடைக்​கானலில் கோடை சீசன் தொடங்​கியது முதல் சுற்​றுலாப் பயணி​கள் வருகை அதி​கரித்​துக் காணப்​படு​கிறது. கடந்த சில நாட்​களாக கொடைக்​கானலில் மாலை நேரத்​தில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது.

இதனால் நீர்​வீழ்ச்​சிகளில் தண்​ணீர் கொட்​டு​கிறது. பிரையன்ட் பூங்​கா​வில் மலர்க் கண்​காட்சி தொடங்​கு​வதற்கு முன்பே பல்​வேறு வண்​ணங்​களில் பூக்​கள் பூத்​துக் குலுங்​கத் தொடங்கி விட்​டன. இந்​நிலை​யில் கொடைக்​கானலில் கோடை​விழா, மலர்க் கண்​காட்சி நடத்​து​வது குறித்து மாவட்ட நிர்​வாகம், தோட்​டக்​கலை, சுற்​றுலாத் துறை​கள் சார்​பில் கலந்​தாய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. திண்​டுக்​கல் ஆட்​சி​யர் செ. சரவணன் தலை​மை​யில் நடந்த இந்​தக் கூட்​டத்​தில், தோட்​டக்​கலைத் துறை துணை இயக்​குநர் நடராஜன், சுற்​றுலாத் துறை அலு​வலர் கோவிந்​த​ராஜ் மற்​றும் அனைத்து துறை அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர் ஆட்​சி​யர் செ.சர​வணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கொடைக்​கானலில் கோடை விழா மற்​றும் மலர்க் கண்​காட்சி வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. கோடை விழாவை முன்​னிட்டு சுற்​றுலாப் பயணி​கள் பங்​கேற்​கும் வகை​யில் பரத நாட்​டி​யம், சிலம்​பம், விளை​யாட்​டுப் போட்​டிகள், படகுப் போட்​டிகள், நாய்​கள் கண்​காட்சி உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மலர்க் கண்​காட்​சிக்கு நுழைவுக் கட்​ட​ண​மாக பெரிய​வர்​களுக்கு ரூ.75, சிறிய​வர்​களுக்கு ரூ.35 என கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மலர் கண்​காட்​சி​யில் வேளாண்​-உழ​வர் நலத் துறை, ஊரக வளர்ச்​சித் துறை, உணவு மற்​றும் உணவு வழங்​கல் துறை, சுற்​றுலாத் துறை அமைச்​சர்​கள் பங்​கேற்க உள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

x