அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதாக புகார்: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: 2023-24-ம் ஆண்​டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்​சா​ரம் வாங்​கியது குறித்து உயர் நீதி​மன்ற மேற்​பார்​வை​யில் விசா​ரணை நடத்த தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழ்​நாடு மின்​வாரி​யம் 2023-23-ம் ஆண்​டில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவை​விட 917.6 கோடி யூனிட் மின்​சா​ரத்தை வாங்​கி​யிருப்​பதும், அதற்​காக ரூ.13,179 கோடி கூடு​தலாக செல​வழித்​திருப்​பதும் தெரிய​வந்​துள்​ளது.

சராசரி​யாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலை​யில், பல்​லா​யிரம் கோடி ரூபாய்க்கு மின்​சா​ரம் வாங்​கப்​பட்​டதன் பின்​னணி​யில் முறை​கேடு நடந்​திருக்​கலாம் என்ற குற்​றச்​சாட்​டுக்கு அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும். தமிழகத்​தில் நிலு​வை​யில் உள்ள அனல் மின் திட்​டங்​கள் குறித்த காலத்​தில் முடிக்​கப்​பட்​டிருந்​தால், தனி​யாரிட​மிருந்து ஒரு யூனிட் மின்​சா​ரத்​தைக்​கூட அதிக விலை கொடுத்து வாங்க வேண்​டிய தேவை இருக்​காது.

தமிழகத்​தின் மின் உற்​பத்​தியே தேவைக்​கும் அதி​க​மாக இருக்​கும். ஆனால், அவ்​வாறு செய்​தால் தமிழகம் நன்​றாக இருக்​கும். தாங்​கள் நன்​றாக இருக்க முடி​யாது என்​ப​தால்​தான் தமிழக ஆட்​சி​யாளர்​கள் மின்​திட்​டத்தை செயல்​படுத்த விரும்​புவ​தில்​லை.

தனி​யாரிட​மிருந்து அதிக விலை கொடுத்து மின்​சா​ரம் வாங்​கு​வது​தான் அவர்​களுக்கு லாபம் என்​ப​தால், அந்த வழக்​கத்​தையே தொடர்​கின்​றனர். இது​தான் மின்​சார வாரி​யத்​தின் இழப்​புக்​குக் காரண​மாகும். தமிழகத்​தில் கடந்த மூன்​றாண்​டு​களில் ரூ.41,000 கோடி அளவுக்கு மின்​சார கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஆனாலும், தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் தொடர்ந்து நஷ்டத்​தில் இயங்கி வரு​வதற்கு காரணம், அதிக விலைக்கு மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யப்​படு​வது​தான்.

இதில் ஒளிந்து கிடக்​கும் அனைத்து மர்​மங்​களை​யும் வெளிக்​கொண்டு வரு​வதற்​காக 2023-24-ம் ஆண்​டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்​சா​ரம் வாங்​கப்​பட்​டது பற்றி உயர் நீதி​மன்ற மேற்​பார்​வை​யில் வி​சா​ரணை நடத்​து​வதற்கு தமிழக அரசு உடனடி​யாக ஆணை​யிட வேண்​டும்​. இவ்வாறு ​ தெரிவித்​துள்​ளார்​.

x