தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 13-ம் தேதி காலை விநாடிக்கு 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 14-ம் தேதி 1,000 கனஅடியாகவும், 15-ம் தேதி 5,000 கனஅடியாகவும் உயர்ந்தது. 16-ம் தேதி அதே அளவுடன் நீடித்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,306 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,479 கனஅடியாக அதிகரித்தது.
108.31 அடி நீர்மட்டம்: அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 108.31 அடியாகவும், நீர் இருப்பு 76.03 டிஎம்சியாகவும் இருந்தது.