ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்


மதுரை: ​முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஏற்​கெனவே தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தால், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா சென்னை வந்​த​போது அவரை சந்​திக்​க​வில்லை என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பாஜக​வுடன் கூட்​டணி அமைப்​பதும், அமைக்​காததும் தவெக தலை​வரின் விருப்​பம்.

தமிழகத்​தில் மக்​களுக்கு எதி​ரான ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. இந்த ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்​பதே அனை​வரின் விருப்​பம். அனை​வரும் ஓரணி​யில் வந்​தால், ஆட்சி மாற்​றம் ஏற்பட வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ளன. கட்​சித் தலை​வர்​கள் நாட்டு மக்​களின் நலன் கருதி ஓரணி​யில் திரள முடி​வெடுக்க வேண்​டும்.

இதைத் தவிர்த்​து, கட்​சித் தலை​வர்​கள் அவர​வர் எடுக்​கும் முடிவு குறித்து நான் கருத்​துத் தெரிவிக்க முடி​யாது. மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா சென்னை வந்​த​போது தன்னை சந்​திக்​காதது வருத்​தம் அளிப்​ப​தாக ஓபிஎஸ் கூறி​யுள்​ளார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில்​தான் உள்​ளார். அதில் எந்த சந்​தேக​மும் இல்​லை. அவர் ஏற்​கெனவே கூட்​ட​ணி​யில் இருப்​ப​தால், அவரை அமித்ஷா சந்​திக்​காமல் இருந்​திருக்​கலாம்.

இபிஎஸ், ஓபிஎஸ் இரு​வரும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில்​தான் உள்​ளனர். அடுத்த தேர்​தலிலும், அதற்கு அடுத்த தேர்​தலிலும் திமுக​தான் வெற்றி பெறும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யுள்​ளார். யார் முதல்​வர் என்​பதை மக்​கள்​தான் முடி​வெடுப்​பார்​கள். தமிழகத்​தில் பாஜக ஏற்​கெனவே வளர்ந்​துள்​ளது. பாஜவை இனி ஆளும்​கட்​சி​யாகக் கொண்​டுவர வேண்​டும்.

தமிழகத்​தில் குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ளன. இதற்கு மதுப் பழக்​கம் முக்​கியக் காரண​மாக இருக்​கிறது. சட்​டம்- ஒழுங்கை நிலை​நாட்ட காவல் துறையை கையில் வைத்​திருக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

x