பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்


சென்னை: செஞ்​சி​யில் ஒரே மையத்​தில் தேர்​வெழு​திய 167 மாணவர்​கள் 100-க்கு 100 மதிப்​பெண் பெற்ற விவ​காரத்​தில் முறை​கேடு எது​வும் நடக்​க​வில்லை என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று கூறிய​தாவது: ஆண்​டு​தோறும் மாணவர்​களின் தேர்ச்சி சதவீதத்தை பொறுத்​து, ஆசிரியர்​களுக்​கான பயிற்​சிகளை அதி​கரித்து வரு​கிறோம். தமிழ், ஆங்​கில பாடங்​களில் அதிக தேர்ச்சி பெறும் வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும். ஏற்​கெனவே அறி​வித்​த​படி கோடை விடு​முறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்​ளி​கள் திறக்​கப்​படும். பள்ளி திறக்​கும்போது வெயி​லின் தாக்​கத்தை கணக்​கிட்டு நடவடிக்கை எடுக்​கப்படும்.

செஞ்​சி​யில் ஒரே மையத்​தில் தேர்​வெழு​திய 167 மாணவர்​கள் பிளஸ் 2 வேதி​யியலில் 100-க்கு 100 மதிப்​பெண் பெற்ற விவ​காரம் சர்ச்​சை​யாக்​கப்​பட்​டுள்​ளது. நமது பிள்​ளை​கள் 100 மதிப்​பெண் எடுத்​ததை​யும், அதற்​காக உழைத்த ஆசிரியர்​களை​யும் பாராட்ட வேண்​டும். அவர்​கள் மற்ற பாடத்​தி​லும் சிறப்​பான மதிப்​பெண் எடுத்​துள்​ளனர். கடந்த ஆண்​டும் செஞ்சிபள்​ளி​யில் மாணவர்​கள் நன்​றாக மதிப்​பெண் பெற்​றுள்​ளனர். அதாவது 91-99 மதிப்​பெண் வரை 104 பேர் எடுத்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக முதல்​கட்ட விசா​ரணையை நடத்​தி​விட்​டோம். வினாத்​தாள் கசிந்​த​தா, தேர்​வறை கண்​காணிப்​பில் வேதி​யியல் ஆசிரியர்​கள் பணி​யில் இருந்​தார்​களா என்ற ரீதி​யில் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இந்த விவ​காரத்​தில் முறை​கேடு எது​வும் நடந்​த​தாக தெரிய​வில்​லை. தொடர் விசா​ரணை முடி​வில் மாணவர்​கள் முழு மதிப்​பெண் எடுத்​ததற்கு ஆசிரியர்​களின் கற்​பித்​தல் முறை காரண​மாக இருந்​தால், அந்த மாடலை தமிழகம் முழு​வதும் கொண்டு செல்​வோம்.

இலவச கட்​டாயக்​கல்வி உரிமை சட்​டத்​தின்​கீழ் தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர் சேர்க்​கைக்​கான நிதி ரூ.617 கோடியை மத்​திய அரசு இது​வரை வழங்​க​வில்​லை. மாநில அரசு அதை ஏற்​றுக்​கொண்டு திட்​டத்தை நடை​முறைப்​படுத்​துகிறது. இந்த நிதியை வழங்​கக் கோரி மத்​திய அரசுக்கு தலை​மைச் செய​லா​ளர் கடிதம் எழு​தி​யிருந்​தார். அதற்கு பதில் வரவில்​லை.

இதையடுத்து பள்​ளிக்​கல்​வித் துறை செய​லா​ள​ரும், ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி மாநில திட்ட இயக்​குநரும் டெல்லி சென்​றுள்​ளனர். அவர்​கள் திரும்பி வந்​ததும், இந்த ஆண்​டுக்​கான ஆர்​டிஇ சேர்க்கை திட்​டம் குறித்த அறி​விப்​பை தெரி​விப்​போம்​. இவ்​வாறு அமைச்​சர்​ கூறி​னார்​.

x