சேலம்: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் நேற்று காலமானார். சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகரில் வசித்து வந்த வெங்கடாசலம் (91) வயதுமூப்பு காரணமாக நேற்று மதியம் காலமானார். அவரது மனைவி பேபிசரோஜா, மூத்த மகள் பைங்கிளி, கடைசி மகன் அருட்புனல் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டனர்.
மகள்கள் பைங்கிளி, இன்சுவை ஆகியோர் கல்லூரி பேராசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். மகன்கள் திருப்புகழ், இறையன்பு ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். வெங்கடாசலம் உடலுக்கு அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடாசலம், தனது உழைப்பால் இரு மகன்களை இந்திய ஆட்சிப் பணியாளர்களாகவும், மகள்களைப் பேராசிரியர்களாகவும் உருவாக்கி, சமூகத்துக்கு அளித்துள்ளார். அவரை இழந்து தவிக்கும் இறையன்பு, திருப்புகழ் மற்றும் குடும்பத்தார், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.