டாஸ்மாக் முறைகேடு வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்


சென்னை: ​சென்​னை​யில் உள்ள டாஸ்​மாக் தலை​மையகத்​தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் திடீர் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் மது​பானங்​களை அதிக விலைக்கு விற்​பனை செய்​தது, மது​பானங்​களை கொள்​முதல் செய்​தது, பார் உரிமம் வழங்​கியது போன்​றவற்​றில் ரூ.1000 கோடி அளவுக்கு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டியது.

இதுதொடர்​பாக கடந்த 2017 முதல் 2024 வரையி​லான கால​கட்​டத்​தில் தமிழக லஞ்​சஒழிப்​புத் துறை போலீ​ஸார் டாஸ்​மாக் அதி​காரி​களுக்கு எதி​ராக பதிவு செய்த வழக்​கு​களின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை​யும் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தது.

இந்​நிலை​யில் டாஸ்​மாக்​கில் நடை​பெற்ற முறை​கேடு​கள் தொடர்​பாக அமலாக்​கத் துறை மற்​றும் லஞ்ச ஒழிப்​புத்​துறை பதிவு செய்​துள்ள வழக்​கு​களை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி, பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் வெங்​க​டாச்​சலபதி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொது நல மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள், டாஸ்​மாக், சிபிஐ, அமலாக்​கத் துறை மற்​றும் தமிழக லஞ்​சஒழிப்​புத் துறை ஒரு​வாரத்​தில் பதிலளிக்க வேண்​டும் என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை அடுத்​த வாரத்​துக்​கு தள்​ளிவைத்​துள்​ளனர்​.

x