வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 40 பேர் காயம்


புதுக்கோட்டை: வடசேரிப்​பட்​டி​யில் நேற்று நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யின்​போது காளை​கள் முட்​டிய​தில் 40 பேர் காயமடைந்​தனர். புதுக்​கோட்டை மாவட்​டம் வடசேரிப்​பட்​டி​யில் நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டுப் போட்​டிக்கு இலுப்​பூர் கோட்​டாட்​சி​யர் அக்​பர் அலி தலைமை வகித்​தார். அமைச்​சர் சிவ.வீ.மெய்​ய​நாதன் போட்​டியைத் தொடங்​கி​வைத்​தார்.

இதில், பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து அழைத்து வரப்​பட்ட 700 காளை​கள் அவிழ்த்​து​விடப்​பட்​டன. 225 வீரர்​கள் காளை​களை அடக்க களமிறங்கினர்.ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யின்​போது காளை​கள் முட்​டிய​தில் 40 பேர் காயமடைந்​தனர்.

இவர்​களில் 10 பேர் புதுக்​கோட்டை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு மேல்​சிகிச்​சைக்​காக அனுப்பி வைக்​கப்​பட்​டனர். போட்​டியை முன்​னிட்டு வெள்​ளனூர் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். இதே​போல, திரு​வரங்​குளம் அருகே வல்​லத்​தி​ராகோட்டை மற்​றும் மணமேல்​குடி அரு​கே​யுள்ள கிருஷ்ணாஜிபட்​டினம் ஆகிய இடங்​களில் நேற்று மாட்டு ​வண்​டிப் பந்​த​யம்​ நடை​பெற்​றது.

x