சென்னை: தமிழக அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரமேஸ்வரனை தமிழக முதல்வர் அறிவுரையின் பேரில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, பரமேஸ்வரனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் தமிழக அரசு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் கேட்டறிந்தார், இச்சந்திப்பின் போது தமிழக ஸ்டாலின் ஏற்கெனவே பரமேஸ்வரனின் சிகிச்சை மற்றும் இதர விஷயங்களுக்கான அனைத்து செலவினங்களையும் தமிழக அரசு ஏற்கும் என உறுதி அளித்ததை பரமேஸ்வரன் மற்றும் அவரது பெற்றோரிடம் தெரிவித்து ஊக்கம் அளித்தார்.
இந்த நிகழ்வின்போது பரமேஸ்வரன், அவரது தந்தை ஆறுமுகம், தாய் சித்ரா, அவரது மனைவி மற்றும் தமிழக அரசின் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.