ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் மே 30-ல் விசைப் படகுகள் ஆய்வு


ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் மே 30-ல் விசைப் படகுகள் வருடாந்திர ஆய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தின் கிழக்குப் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப்.15 துவங்கி ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. விசைப்படகு மீனவர்கள் தங்களுடைய படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் பூசுதல், புதிய வலைகளை பின்னுதல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மே-30 ஆம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் வருடாந்திர ஆய்வு நடைபெற உள்ளதால் இது தொடர்பாக மீன்வளத் துறையினர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு: விசைப்படகில் வர்ணங்கள் தெளிவாக பூசியிருப்பதுடன், பதிவு எண்கள் அடித்தல் இன்றி தெளிவாக எழுதிட வேண்டும்.

ஆய்வின்போது படகு உரிமையாளர் கண்டிப்பாக படகில் இருத்தல் வேண்டும். அரசால் வழங்கப்பட்ட வயர்லெஸ் ரேடியோ, செயற்கைகோள் கைபேசி, டிரான்ஸ்பான்டர் ஆகியன கண்டிப்பாக ஆய்வில் காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x